யாவும் இயற்கை !
எல்லாம் தற்செயல் !
எல்லையற்ற வான வெளியில் அங்கும் இங்குமாக
இறைந்து கிடந்த பலவகையான இயற்கை மூல அணுக்கள் திடீரென்று ஒரு நேரத்தில்
“தற்செயலாக” ஒன்றாக இணைந்து கொண்டன. அப்படி இணைந்தவுடன் அது “தானாகவே” குழம்பாக
மாறிக்கொண்டன அவை சூரியனாக இன்னும் பல கோளங்களாக மாறி எத எதையோ சுற்றி வந்தன பிறகு
அதில் இருந்து பல துண்டுகள் பிரிந்து வந்தன அதில் ஒன்று தான் நாம் வாழும் உலகம்
அதில் இருந்து இன்னொரு துண்டு பிரிந்து போனது அது தான் நிலா! ஆம் மனிதன்
வெற்றிக்கொடி நாட்டி வந்திருக்கின்றானே ஒளிப் பிரதிபலிக்கின்ற அதே சந்திரன் தான்.
எல்லாம் தற்செயல் தான்................................................................................
பிரிந்து போனதே அந்த பூமி.....! பாவம் அதுவும்
எவ்வளவு காலம் தான் கொதித்து கொண்டு இருக்கும் “தற்செயலாகவே” அது குளிர்ந்தது. அது
மட்டுமா திடீரென்று “தானாக” பள்ளங்களும் மேடுகளும் உருவாகின. பிறகு “தற்செயலாக”பிராண
வாயுவும் (ஆக்சிஜன்) நீரக வாயுவும் (ஹைட்ரஜன்) சேர்ந்து நீராக மாறியது அதுவும்
கொஞ்சம் நஞ்சம் இல்லை நண்பர்களே நாம் இன்று பார்கின்ற கடல்கள்..... பெரும்
சமுத்திரங்கள் எல்லாம் அப்படி உருவாகியது தான்.... அதில் உப்பும் (உப்பு எப்டி
உருவாச்சு நு கேக்காதீங்க பா..அதுவும் தானாதான்) தானாக கலந்து விட்டது இல்லை
என்றால் கற்பனை செய்து பாருங்கள் உப்பில்லாத சாப்பாடு தான் நாம் சாப்பிட்டு இருக்க
வேண்டும்.அப்படி உருவான நீரும் கூட சரியாக அந்த பள்ளங்கள் நிறைந்த உடன் நின்று
விட்டன (சத்தியமா தான தான்). இப்பவும் வான்வெளியில் அந்த வாயுக்கள் உள்ளன ஆனால்
அப்படி எல்லாம் உருவாகாது.....
தொடரும்.....
இப்படிக்கு
அறிவியல்
This comment has been removed by the author.
ReplyDelete