Tuesday 8 January 2013

எழுதுகோல்................... BALLPOINT PEN

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.....

"பூமியில் உள்ள மரங்கள் அனைத்தும் எழுதுகோல் ஆனாலும், கடல் முழுவதும் (மையாகிவிட்டாலும்) அதற்கு மேல் இன்னும் ஏழு கடல்களின் மை அளித்து உதவினாலும் கூட அல்லாஹ்வின் வாக்குகள் (எழுதித்) தீர்ந்து போக மாட்டா. திண்ணமாக அல்லாஹு வலிமை மிக்கவனும் நுண்ணறிரிவாலனும் ஆவான்." (திருக்குரான் 31:27)

பள்ளிக்கூடம் சென்ற நமக்கு பேனாவை அறிமுகப்படுத்த தேவை இல்லை. ஆனால் நாம் எழுதும் பால் பாயிண்ட் பேனாக்களை பற்றிய சில சுவையான தகவல்களை அறிந்து கொள்வது அவசியம். முதன் முதலில் 1938 ஹன்கேரியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் லேச்ஜியோ பீரோ என்பவர் தான் பால் பாயிண்ட் பேனாவைக் கண்டறிந்தார்.

உலகிலேயே முதன் முதலில் நியூயார்க் நகரில் 1945 ம் ஆண்டு பால் பாயிண்ட் பேனா விற்பனை செய்யப்பட்டது.

சுமார் 4000-7500 வரை நீளமுள்ள கோடு அல்லது ஐம்பதாயிரம் வார்த்தைகளை ஒரு பால் பாயிண்ட் பேனாவினால் எழுதலாம்.
சராசரியாக ஒரு மனிதன் ஒருவருடத்தில் 4.3 பால் பாயிண்ட் பேனாக்களை உபயோகிக்கின்றான்.

95 சதவிகிதம் மக்கள் பால் பாயிண்ட் பேனா பரிசாகக் கிடைத்தால் எழுதக்கூடிய முதல் வார்த்தை அவனுடைய பெயர்தான் என்று இணையதளங்கள் கூறுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க வில் மட்டும் 2 பில்லியன் க்கும் அதிகமான பல் பாயிண்ட் பேனாக்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த பேனாக்களின் மூடி அடிப்பதினால் ஒவ்வொரு ஆண்டும் 100 இறப்புகளும் இந்த வகை பேனாவினால் ஏற்படுகின்றன.




இந்த பிலாட்டினத்தால் ஆன பால் பாயிண்ட் பேனா தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த பேனா ஆகும்.... இதன் விலை எவ்வளவு தெரியுமா? ஒரு மில்லியன் யுரோ. அதாவது 721,98,67,787 ருபாய் மட்டும் தான் சீக்கிரமா வாங்கிடலாம் ஓகே.....

வல்ல இறைவன் நமக்கு அருளியுள்ள இந்தப் பேனாவை எப்படி உபயோகப்படுத்தினோம் என்பதைக் குறித்தும் நாளை மறுமையில் கணக்கைச் சமர்பிக்க வேண்டும். உண்மையைத் தெளிவாக எழுதுவோம். இம்மை தேர்வில் மட்டுமல்ல, மறுமையிலும் வெற்றி பெறுவோம். இன்ஷா அல்லாஹ். 

2 comments: