Tuesday 15 January 2013

படைப்பின் நுட்பம்......ship.


கப்பல்.....................................


நம் அனைவருக்கும் கப்பலில் செல்வதென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் சிறிதளவு பயமும் அதனுடன் கலந்தே காணப்படும். ஏனெனில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவ்வளவு தான்!
மிகப்பெரிய சமுத்திரத்தின் மேலே அணைத்து மக்களையும் ஏற்றிக்கொண்டு, சரக்குகளையும், வாணிபப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு பயணிக்கும் கப்பலைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அதிலும் போர்க்கப்பல், சுற்றுலாக்கப்பல் எனப் பல வகைகள்.

உலகில் பரப்பில் அதிகமான சதவீதம் சூழப்பட்டுள்ள கடலில் எத்தனை, எத்தனை உயிர் வளங்கள், கனிம வளங்கள், அழகான வண்ண மீன்கள் என அனைத்தும் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்பவைகளாகவே இறைவன் படைத்துள்ளான்.

இந்த பறந்து விரிந்த கடலைப் பார்க்கும் போது கடற்கரையில் இருக்கும் நமக்கு உடல் சிலிர்க்க வேண்டாமா? இத்தனை வளங்களையும் மனிதனுக்காக உலகில் படைத்து தந்த இறைவன் மனிதனிடம் இருந்து எதிர்பார்ப்பது என்ன? என்பதை குறித்து சிந்தியுங்கள் இறைவனின் புகழைப் பரப்புங்கள்!

........அவனே (உங்களுக்காக) கடலை வசப்படுத்தி தந்துள்ளான். அதிலிருந்து நீங்கள் புத்தம்புதிய மாமிசத்தை புசிக்க வேண்டும் என்பதற்காகவும், நீங்கள் அணிகின்ற அழகுப் பொருட்களை அதிலிருந்து வெளிக்கொணர்ந்திட வேண்டும் என்பதற்காகவும்! மேலும், கப்பல் கடலைப் பிளந்துக் கொண்டு செல்வதையும். நீர் காண்கின்றீர். மேலும், உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடுவதற்காகவும், அவனுக்கு நன்றி செலுத்துக் கூடியவர்களாய் நீங்கள் திகழ்வதற்கு ஆகவுமே இவையெல்லாம் இருக்கின்றன.(திருக்குர்ஆன்; 16:14)

1 comment:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    ReplyDelete